தேர்தலுக்கு முதல் நாள் ஊடகவியலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி!


இர்ஷாத் ரஹ்மதுல்லா

எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன் தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட செலகத்தில் நேற்று (21) இடம் பெற்ற தேர்தல் ஆணையகத்தின் 2026 -2029 கால மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கான பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பில் இடம் பெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் அத்தியச்சகர் லக்சித்த ருவான் ஜெயனாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் தேர்தல் ஆணையகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சன்ன சில்வா உட்பட ஊடகவியலாளர்கள், துறைசார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த செயலமர்வில் தேர்தல்கள் ஆணையாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,

நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்துவருகின்றது.

குறிப்பாக மக்களுக்கு உயிரோட்டமுள்ள தெளிவுபடுத்தல்,சட்ட திருத்தம்,நிறுவன ரீதியான மீளாய்வு,மற்றும் நவீன தொழில நுட்ப அறிமுகம் என்ற விடயங்கள் தொடர்பில் பல்துறையாளர்களின் கருத்துக்களை பெறுவது இதனது நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

ஊடகவியளாலர்கள் தொடர்பில் பல்வேறு கோறிக்கைகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து அதி கூடிய கவனம் செலுத்தபட்டுள்ளதாகவும் அவர் இதன் போது கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் 2026 – 2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட அளவில் தொடர்புடைய பங்குதாரர்களுடன் நடத்தப்படும் கலந்துரையாடல் தொடரின் புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டம் புத்தளம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதேவேளை தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு இதன் போது அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை புத்தளம் தேர்தல் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஏ. பாத்திமா இணைப்பு செய்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post