கஞ்சாவுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்!


ஜூட் சமந்த

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று (27) மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பின் போது, பாரிய அளவிலான கேரள கஞ்சா பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 16 கிலோ 670 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, போதைப்பொருள் வியாபாரம் மூலம் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 92,783 ரூபாய் பணமும் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைதான சந்தேக நபர் 1985 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் துறையில் 'உப சேவை பொலிஸ் கான்ஸ்டபிளாக' இணைந்து, பின்னர் 1990 ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகியவர் என்பது சந்Nதுக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொஸ்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post