புத்தளம் - கொழும்பு முகத்திடலில் ஆணின் சடலம் மீட்பு

எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் கொழும்பு முகத் திடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்த பொதுமக்கள் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் மற்றும் தடவியல் பொலிஸாரும் சடலத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஷாம் சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மற்றும் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post