புத்தளம் நகர பிதாவை ஆரத் தழுவி கண்ணீருடன் வழியனுப்பி வைத்த நகர சபை ஊழியர்கள்

நமது நிருபர்

நாளை 19ம் திகதியுடன் சகல உள்ளூராட்சிமன்றங்களின் ஆயுட்காலம் முடிவுறுத்தப்படவுள்ள நிலையில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் நகரசபை உத்தியோகத்தர்களினால் காரியாலயத்திலும், வேலைத்தள வளாகத்திலும் இன்று நடாத்தப்பட்டன.

இதன்போது, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கனத்த மனதுடன் புத்தளம் நகர பிதாவின் சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.

இந்த பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் நகர சபை செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அலுவல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் சேவையை பாராட்டி, நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment

Previous Post Next Post