சாஹிப்
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்ச்சிகள் இன்று (24) மாலை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் அதிபர் ஜவாத் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி உத்தியோகபூர்வமாக இன்றைய போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
நகரபிதா உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கும் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் அதிதிகள் மரியாதை அணிவகுப்பிலும் கலந்துகொண்டனர்.






