முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் யாரையும் கட்சியிலிருந்து நானாக விரட்டியது கிடையாது என்று அக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில்இணைத்துக்கொண்டது போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை இணைத்துக்கொள்வீர்களா என்று ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தாய்வீடாக கருதும் யாருக்கும் இந்தக் கதவு திறந்திருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால், அவர்கள் இணைய விரும்புகின்ற போது இந்தக் கட்சியின் பாரம்பரியத்துக்கமைய, கட்சியில் இருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடியதன் இறுதியில் சாத்தியமான முடிவை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
