கொழும்பு 28
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ளஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவக்கின்றன.
ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடந்த 25ஆம் திகதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் கடந்த (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்த நிலையில் ஆணைக்குழு உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி

