மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு ஒரு மடல்!

மதிப்பும் மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உருப்பினர் அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு, 

அஸ்ஸலாமு அலைக்கும்.

தனித்துவம் இழந்து அவமானப்பட்டு கவலையும் கண்ணீருடன் அரசியல் அனாதையாகிவிட்ட நிலையில், கேட்பார் யாரும் இல்லையே என்று இருந்த நேரத்தில் எங்களுக்கு என்று ஒரு கட்சி உள்ளது அதன் தலைவர் இருக்கின்றார் இன்ஷா அல்லாஹ் அவர் எமக்கு உதவி செய்வார் என்று நமது கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் முன்னாள்  மாகாண உறுப்பினருமான மதிப்பிற்குரிய என்.டி.எம். தாஹிர் அவர்களின் ஆறுதல் வார்த்தையுடன் இரவு என்று பாராது எங்களை உங்களிடம் அழைத்து வந்தார். 

இரவு  பதினொரு மணியும் தாண்டிய நேரத்தில்  கொழும்பில் உங்கள் வீட்டில் புன்னகையுடன் எங்களை வரவேற்று, கணமூலை ஊர் மக்களின் கவலையை அழகாக மௌலவி முஜிபுர் ரஹ்மான் அவர்கள் எடுத்துக் கூறினார். 

அந்த நேரம் நீங்கள் எங்களுக்கு நடந்தது ஒரு திட்டமிட்ட சதி என்பதை உணர்ந்து கொண்டதை உங்கள் முகத்தின் அமைதியில் கண்டு கொண்டேன். நிச்சயமாக இழந்து போன எங்கள் மதிப்பிற்குரிய பைசர் மரைக்காரின் உறுப்பினர் பதவியை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கை உங்களின் கவலையான பேச்சில் விளங்கி கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ். 

அக்கறைப்பற்று - கரம்பை தொடக்கம் பூனைப்பிட்டி வரை கட்சியின் அரசியலுக்கு பைசர் மரைக்காரின் தேவையை உணர்த்தி உங்களிடம் எடுத்துக் கூறிய மாவட்ட அமைப்பாளர் என்.டி.எம். தாஹிர் அவர்களின் கருத்தையும் நீங்கள் ஏற்றுக்கொண்டதை பெருமையாக நினைக்கின்றேன். தேனிர் தந்து அன்பாக உபசரித்தீர்கள். அரசியல் செயல்பாடு பற்றி தைரியமாக பேசினீர்கள். ஊக்கமளித்தீர்கள். மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பட்டியல் ஆசனத்தை பெற்றுத்தர தேவையான தரவுகளை அடுத்த நாள் 10. 00 மணிக்கு வாட்ஸப்  மூலம் தனக்கு அனுப்பும் படி நண்பர் பஷால் மௌலவியிடம் நீங்கள் கூறியவுடன் கவலை பறந்தது அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷத்துடன் ஊர் திரும்பினோம்.

தலைவர் என்ற பண்புகளை உங்களின் ஒவ்வொரு அசைவுகளிலும் நான் கண்டதை வீடு வரை நினைத்துப் பார்த்து மெய்சிலிர்த்தேன்.

நினைத்ததை சாதிக்கும் உறுதியான உங்களின் முயற்சியினால் பல தடைகள்  வந்த போதும் மொத்த வேலைகளையும் கவனிக்காது பெறுமதியான உங்களின் காலத்தையும் நேரத்தையும் தியாகம் செய்து வெளிநாட்டு பயணத்தையும் தள்ளிப்போட்டு எனது கட்சியின் ஒருவர், ஒரு மக்களின் அல்லது ஒரு சமூகம் என்று எங்களை மதித்து பைசர் மறைக்கார் அவர்களுக்கு பிரதேச சபை உறுப்புரிமையை பெற்றுத்தந்த உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்து விடப் போகிறோம்?

நன்றி உடைய கடன்காரர்களே...

என்றும் உங்களுடன். நமது கட்சிக்காக பைசர் மரைக்கார் நம்பிக்கையுடன் உழைப்பார். இன்ஷா அல்லாஹ் அதற்கு நாங்கள் சாஹிதாக இருப்போம்.

கணமூலை எம்.சி. றிஸ்வான் (இஸ்வான்)

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்.


Post a Comment

Previous Post Next Post