பைசல் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் மூன்று வீதிகள் புனரமைப்பு!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் புனரமைக்கப்படவுள்ள வீதிகளை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (30) நேரில் சென்று பார்வையிட்டனர்.

புத்தளம் பிரதேச சபைக்குற்பட்ட மதுரங்குளி தொடக்கம் கிவுல வரையிலான வீதி, வன்னாதவில்லு பிரதேச சபைக்குற்பட்ட வட்டகண்டல் பகுதியில் உள்ள வீதி மற்றும் புத்தளம் மணல்தீவு  - செவ்வந்தீவு ஆகிய வீதிகளே புனரமைக்கப்படவுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, குறித்த வீதிகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு புனரமைக்கப்படவுள்ள குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அருள்தாசன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான அகில சம்பத், ஜிப்ரி சுலைமான் , வன்னாதவில்லு பிரதேச சபை உறுப்பினர் அஸ்லம், புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட வீதிகளை புனரமைப்பது சம்பந்தமாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் கருத்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், குறித்த வீதிகளை சிறந்த முறையில் புனரமைப்பதற்கான தனது ஆலோசனைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கினார்.

மதுரங்குளி - கிவுல வீதி


மணல்தீவு  - செவ்வந்தீவு வீதி


வட்டகண்டல் பகுதியில் உள்ள வீதி

படங்கள்: பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு



Post a Comment

Previous Post Next Post