வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பஞ்சிகாவத்தை - அபேசிங்க ராமய சைகோஜி முன்பள்ளியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்களித்தார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.



