மன்னார், பேசாலை கடற்கரைப் பகுதியில் சுமார் 218 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பேசாலை கடற்கரையில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகில் இந்த கேரள கஞ்சா தொகையை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்கள் பேசாலை கடற்கரையில் டிங்கி படகை கைவிட்டிருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகை சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.