பைஸல் எம்.பியின் முன்மாதிரியான செயற்பாடு...!

ரஸீன் ரஸ்மின்

தான் பயணித்த காரில் மோதி, வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளதை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் , உயிரிழந்த குறித்த நபரின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் பைசல் பயணித்த கார், கடந்த 14 ம் திகதி கொஸ்வத்த, ஹால்தடுவன பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் குறித்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் புத்தளம் - மதுரங்குளியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாதம்பை உள்வீதியூடாக (ஹொர வங்குவ) பயணித்த கார் பின்னர் தோப்புவ சந்திக்கு சென்று மீண்டும் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியை சென்றடையும்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார்,  கொஸ்வத்த, ஹால்தடுவன பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் ஒன்றுவிட்ட சகோதரர் வாகன சாரதியாக இருந்து வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியான பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் ஒன்றுவிட்ட சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல், குடும்ப உறவினர்களை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும், மரண வீட்டிற்கு வருகை தந்திருந்த மக்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல், கலந்துரையாடினார்.

மரண வீட்டுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் பைசலின் இந்த முன்மாதிரியான செயற்பாடு பற்றி மரண வீட்டிற்கு வருகை தந்திருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post