புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாமின் தாயார் காலமானார்...!

சாஹிப்

புத்தளம் ரஹ்மான் பள்ளி மஹல்லாவில் வசித்து வந்த ஹதீஜா உம்மா அவர்கள் காலாமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார், மர்ஹூம் செய்யது முஹம்மது , ரஹ்மத் பீவி தம்பதிகளின் அன்பு மகளும், மர்ஹூம் பதுர்தீன் ஜே.பியின் அன்பு மனைவியும், 

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம், இல்ஸாம் ஆகியோரின் அன்புத் தாயாரும் , ஜெஸீமா, ஹலீமா ஆகியோரின் மாமியார் ஆவார்.

மேலும் காலஞ்சென்ற இப்ராஹிம், உம்மு ரசீனா மற்றும் மர்ஜான், முஸ்தபா, நூர்தீன், ஹபீபா, நாகூர் உம்மா, ஆகியோரின் அன்பு சகோதரயும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா புத்தளம் நாகூர் பள்ளி மஹல்லாவில் உள்ள அன்னாரது மகன் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா இன்று (15) அஸர் தொழுகையின் பின்னர் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:

தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம்

திடீர் மரண விசாரணை அதிகாரி

Post a Comment

Previous Post Next Post