கணமூலையில் இடம்பெற்ற சித்திரப் போட்டி!

ரஸீன் ரஸ்மின்

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மங்கள எளிய சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட கணமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் சித்திரப் போட்டியொன்று ஞாயிற்றுக்கிழமை (21) கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீல் அவர்களின் ஆலோசனையில் கணமூலை தெற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் கணமூலை அர் - ரஹ்மான் , லதீப் மாவத்தை அல் - அக்‌ஷா, மிஹ்ராஜ்புரம் அல் - மதீனா ஆகிய சமுர்த்தி சிறுவர் சங்கங்கள் இணைந்து குறித்த சித்திரப் போட்டி நகழ்ச்சியை நடத்தியது.

"போதையற்ற ஒரு நாடு, செழிப்பான ஒரு நாளை" எனும் தலைப்பில் இடம்பெற்ற சித்திரப் போட்டி மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 

முதலாம் பிரிவில் 1 ஆம் ஆண்டு முதல் 3ஆம் ஆண்டு வரையும், இரண்டாம் பிரிவில் 4 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரையும், மூன்றாம் பிரிவில் 7ஆம் ஆண்டு முதல் 10 ஆம் ஆண்டு வரையுமான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதன்போது, முதலாம் பிரிவு மாணவர்களுக்கு காலைக் காட்சியும், இரண்டாம் பிரிவு மாணவர்களுக்கு மாலைக் காட்சியும், மூன்றாம் பிரிவு மாணவர்களுக்கு போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பு வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் சித்திரப் போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த சித்திரப் போட்டி நிகழ்ச்சிக்கு புத்தளம் ஊடக மையம் (PMC) ,  விடிவெள்ளி பத்திரிகை, உதயம், Utv, eNews1st, RJS தமிழ் ஆகிய ஊடகங்கள் இந்த சித்திரப் போட்டி நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post