இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு...!

ரிபாக்

கடும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (09) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, 08 அடி உயரத்தில்  02 வான் கதவுகளும், 06 அடி உயரத்தில் 02 வான் கதவுகளும்,  04 அடி உயரத்தில் 04 வான் கதவுகளும், 02 அடி உயரத்தில் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 15,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் , அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டு வினாடிக்கு 650 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஜயந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post