நிதி மோசடியில் ஈடுபட்ட மாலைதீவு பிரஜை அதிரடியாக கைது..!

சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த போது ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய மாலைதீவைச் சேர்ந்த பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மாலைதீவு பிரஜையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post