- ரஸீன் ரஸ்மின் -
புத்தளம் - கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி - கண்டக்குளி பகுதியில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு சொந்தமான துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது குறித்த துப்பாக்கி தவறுதலாக வெனித்ததில் மேற்படி இளம் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிடனர்.
மேலும், இந்த சம்பவத்தில் இன்னொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.