அநுர உட்பட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு

இன்றைய தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு நிதியமைச்சு, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடல் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைய தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.ப. 1.00 - பி.ப. 8.00 வரை குறித்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுமெனவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுமென தெரிவித்தும் அவ்வார்ப்பாட்டத்தை நடத்தாதிருக்கும் உத்தரவை கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரசீலித்த நீதிமன்றம், குறித்த சில வீதிகளுக்கு நுழைவதை தடுக்கும் உத்தரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Post a Comment

Previous Post Next Post