புத்தளம் விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!



ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - பாலாவி , ஹூஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இன்றைய தினம் உயிரிழந்த நபர் வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள தனது வியாபார நிலையத்திற்கு சென்ற ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிலும்,  வவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும் , புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை முன்னெடுத்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் , ஜனாஸாவை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

குறித்த ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தீர்ப்பு வழங்கி ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கவண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post