புத்தளம் மாநகர மேயர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

புத்தளம் மாநகர சபை எல்லைக்குற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் மாநகரசபையின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட்அஹமட் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகள் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதுடன் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது எமது ஊரின் அழகிற்கும் சுகாதாரத்திற்கும் பங்கம் விளைவிப்பதுடன் அதிகமாக வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு மாநகரசபைக்  கட்டளைச் சட்டங்களுக்கமைய கால்நடைகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆகவே கால்நடை  வளர்ப்போர் தங்களது கால்நடைகளை உரிய வகையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறான கால்நடைகளை கட்டுப்படுத்தும் மாநகரசபையின் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி எமது நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நடமாடும் கட்டாக்காலி கால்நடைகள், குறிப்பாக இரவு வேளைகளில் நடமாடும் கால்நடைகள் மாநகரசபையினால் பிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கான தண்டப்பணம் மற்றும் பராமரிப்புச்செலவு என்பன விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை உரிமையாளர்கள் தண்டப்பணத்தை செலுத்தி உரிய  காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ளத்தவறின் குறித்த கால்நடைகள் ஏல விற்பனை மூலம் விற்பனை செய்யப்படும் என்பதனையும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஊடகப்பிரிவு


Post a Comment

Previous Post Next Post