உலக சாதனை படைத்தார் மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவுகள் ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மரதன் அமர்வு காலை 10:00 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட 15 மணி நேரம் நீடித்தது, சுமார் 14 மணி நேரம் 54 நிமிடங்களுக்குப் பிறகு முடிந்தது. நிகழ்வின் போது பிரார்த்தனை செய்வதற்காக ஜனாதிபதி முய்சு சிறிது நேரம் மட்டுமே இடைநிறுத்தினார்.

இது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை முறியடித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 2019 இல், உக்ரைனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கியின் 14 மணி நேர ஊடகவியலாளர் சந்திப்பு, பெலாரஷ்ய அரசியல்வாதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வைத்திருந்த ஏழு மணி நேரத்திற்கும் மேலான முந்தைய சாதனையை முறியடித்ததாக அறிவித்தது.

Post a Comment

Previous Post Next Post