தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு; 13 வேட்பாளர்களும், 42 ஆதரவாளர்களும் கைது!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 42 பேரும், 11 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


தேர்தல் விளம்பரங்கள்

Paid Add

Paid Add

Paid Add

Paid Add


Post a Comment

Previous Post Next Post