திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பஸ் ஒன்று பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பின்னர் பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ஸின் சாரதி 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முஹம்மட் அஸ்கர் முஹம்மட் அர்சாத் என்பவரே உயிரிழந்துள்ளார்
காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலீசார் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் விளம்பரம் (Paid Add)