புத்தளத்தில் "நிலைமாறுகால நீதி" எனும் தொனிப்பொருளில் செயலமர்வு!


எம்.ஏ.ஏ.காசிம்

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மக்கள் ஒன்றிணைவு (PUJA) 23 ஆவது "நிலைமாறு கால நீதி என்னும் தொனிப் பொருளில் செயலமர்வு" ஒன்று இன்று காலை  புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள  WODEPT அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி சாந்த பத்திரன மற்றும்  தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் என்.விஜயகாந் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியதுடன், தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா Zoom தொழிற்நுட்பத்துடன் இணைந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

இந்த செயலமர்வில் மதத் தலைவர்கள்  பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post