விபத்தில் மனைவி பலி; கணவன் வைத்தியசாலையில்!


ரிபாக்

புத்தளம் - பல்லம , அடம்மன பிரதேசத்தில் நேற்று (2) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பை , தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த  ஏ.இந்திரா (வயது 30) எனும் திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் ஆனமடுவ, ஊரியாவ பகுதியில் மரண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த கணவனும், மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிலாபத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த மகேந்திர ரக கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post