அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் சஜித்திற்கு ஆதரவு...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அகில  இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடம் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுத்ததாக ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post