புத்தளம் - முந்தல் பிரதேசத்திற்குட்பட்ட நல்லாந்தழுவை அல் மதீனா பாலர் பாடசாலைக்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியை என்.எம்.எப். நஸ்ரின் தலைபையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, புதிதாக பாலர் பாடசாலைக்கு சேர்க்கப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், இனிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
