அலி சப்ரி ரஹீம் அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் பாராளுமன்றத்தில் இன்றையதினம் (22.09.2023) வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே மாதம் தங்கம் மற்றும் தொலைபேசிகளை துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SM

Post a Comment

Previous Post Next Post